மருத்துவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மருத்துவத் தொழிலை செய்பவர்கள் மருத்துவர் ஆவர். மிகவும் கடுமையான நீண்ட பல்கலைக்கழகக் கல்விக்கும் நேரடி அனுபவ கல்விக்கும் பின்னரே ஒருவர் மருத்துவராகப் பணிபுரிய அனுமதிக்கப்படுவார். இக்கல்வி சில நாடுகளில் high scools ஆரம்பித்து குறைந்தது ஐந்து ஆண்டுகள் எடுக்கும் சில நாடுகளில் மேல் நிலை பள்ளிக் கல்வி முடித்தபின் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கலாம்.
முறையான கல்லூரிக் கல்வி பயிலாமல் குருகுல முறையில் பயின்று அந்த அனுபவத்தை வைத்து சிகிச்சை அளிப்பவர்கள் வைத்தியர் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது இந்த வித்தியாசம் மறைந்து வருகிறது. சித்த வைத்தியம், ஆயூர்வேத வைத்தியம் மற்றும் ஹோமியோபதி ஆகியவை கல்லூரிகளில் கற்பிக்கப் படுவதால் அம்முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் சித்த மருத்துவர், ஆயூர்வேத மருத்துவர் ஹோமியோபதி மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார்கள்