அஜந்தா ஓவியங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் அஜந்தா எனும் ஊரில் உள்ள குகைகளில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்களே அஜந்தா ஓவியங்களாகும். இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரையப்பட்டுள்ளன. பௌத்த மதக் கொள்கைகளை முதன்மைபடுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.