இலங்கையின் தேசியக்கொடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தற்போதுள்ள இலங்கையின் தேசியக்கொடி 1950-ல் நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்டது.
[தொகு] கொடியின் பகுதிகள்
இலங்கையின் தேசியக்கொடி மஞ்சள் நிறப் பின்னணியில் அமைந்துள்ளது. இதில் இரண்டு பகுதிகளைக் காணமுடியும். கொடிக் கம்பத்தின் பக்கம் இருக்கும் பகுதியில் செம்மஞ்சளும், பச்சையுமான நிலைக்குத்தான இரண்டு பட்டைகள் உள்ளன. கொடியின் பெரும்பகுதியை அடக்கியுள்ள மற்றப்பகுதி கருஞ் சிவப்பு நிறத்தில் மஞ்சள் நிறத்திலான வாளேந்திய சிங்கமொன்றையும், நான்கு மூலைகளிலும் அரச மரத்து இலைகளையும் கொண்டுள்ளது. செம்மஞ்சள் நிறப் பட்டை தமிழரையும், பச்சை நிறப் பட்டை முஸ்லீம்களையும், சிங்கத்துடன் கூடிய கருஞ் சிவப்பு நிறப் பகுதி சிங்களவர்களையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.