இ. பத்மநாப ஐயர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இ. பத்மநாப ஐயர் (இரத்தின ஐயர் பத்மநாப ஐயர், பி. ஆகஸ்ட் 24, 1941, யாழ்ப்பாணம்) ஈழத்து இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றி வரும் இலக்கிய ஆர்வலர். தனது இலக்கியப் பங்களிப்புக்காக இயல் விருது பெற்றவர். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் இப்பொழுது லண்டனில் வசித்து வருகிறார்.
[தொகு] இலக்கியப் பணிகள்
இவர் தரமான நூல்களும் இதழ்களும் ஈழத்து வாசகர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதிலும் ஈழத்துப் படைப்புக்கள் நூல்வடிவம் பெற வேண்டும் என்பதிலும் அறுபதுகளிலிருந்து தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகின்றார்.
தமிழியல் பதிப்பகத்தின் மூலம் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். கண்ணில் தெரியுது வானம் முதலிய குறிப்பிடத்தக்க நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதில் பங்காற்றியுள்ளார். காலச்சுவடு, நூலகம் திட்டம் போன்றவற்றின் ஆலோசகராகவும் இருக்கிறார்.
கனடாவிலிருந்து வெளிவரும் காலம் சஞ்சிகை பத்மநாப ஐயரின் பணிகளைக் கௌரவிக்குமுகமாகச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது.