கண்டி இராச்சியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கண்டி இராச்சியம், இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஒரு இராச்சியமாகும். இதன் வரலாறு, 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று கண்டி என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது.
[தொகு] கண்டி அரசர்கள்
- சேனா சம்மத விக்கிரமபாகு (1469-1511)
- ஜயவீர (1511-1552) கரலியத்த பண்டார (1552-1582)
- 1ம் விமலதர்மசூரிய (????-1604)
- செனரத்(1604-1635)
- 2ம் இராஜசிங்கன் (1640-1687)
- 2ம் விமலதர்மசூரிய (1687-1707)
- வீரபராக்கிரம நரேந்திரசிங்கன் (1707-1739)
- ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739-1747)
- கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747-1782)
- இராஜாதி ராஜசிங்கன் (1782-1798)
- ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798-1815)