பேச்சு:கலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கலை என்பதற்குப் பொருள்: 1.மதியின் பங்கு 2.சீலை 3.கல்வி, விஞ்ஞை, வித்தை, ஊதியம், சாலம், ஓதி, உறுதி, கேள்வி 4.நூல் 5.கலைமான் 6.மேகலை 7.ஊதுகொம்பு 8.அசுவினி நட்சத்திரம் 9.ஆசினி 10.சேகு 11.காழ்ப்பு 12.மரத்தின் வயிரம் 13.மகரமீன், சுறா, மீனேறு 14.இரலை, வச்சயம், புல்வாய், கருமான் 15.காலநுட்பத்தின் பெயர் 16.துடி 17.திதி
அகத்தியர், தன் பாக்களிலே, யோகம் ஞானம் வரும்போது கலைஞானமென சூரிய, சந்திர, அக்கினி கலைகளைத்தான் கூறிவந்துள்ளார்.
"பீடமடா முதல் பீடம் ரவிதான் சூரியன் பிலத்ததொரு கோடாகோடி பிரபை வீசும் மாடமடா மதிசந்திரனிரண்டாம் பீடம் மகத்தான கோடாக்கோடி கலை தானாகும் ஏடமாமிரவி அக்கினிதான் மைந்தா யென்மகனே மூன்றாம் பீடமியல்பதாகும் ஆடமாமதிக செகச் சோதியான அக்கினிதான் கோடா கோடி அடவிதாமே." இங்கே நாடிகலைகளைக் குறிப்பிட்டுள்ளார்.
"ஆதியந்தஞ் சோதியொளி ரவியில் நின்ற அகண்ட பரிபூரணத்தின் மதியே போற்றி வேதியனும் மாலயனும் பணிந்து போற்றும் விந்து நாத பீடபிரம்மம் போற்றி சாதியெனுமாயி சரசுவதியே யம்பாள் சகலகலை வாமியுடைக் கமலம் போற்றி நாதியெனும் மறைநாலு வேதமான நாதாந்த கணேச குண்டலி காப்பாமே." இங்கு சகலகலையென 64கலைகளக் குறிப்பிடுகிறார்.
சோதிடம் கூறும்போது அசுவினியையும், திதிகளையும் குறிக்கிறார். மருத்துவம், பஞ்சபட்சி சொல்லும்போது மறைபொருள் குறிக்கும் சொற்களைப் பயன்படுத்துகிறார்.
ஆக, சொல்லும் சாற்றிறத்திற்கேற்ப கலைஞானத்தின் பொருள் மாறுகிறது .