கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 51 வது மேளகர்த்தா. "பிரம்ம" எனப்ப்டும் 9 வது சக்கரத்தில் 3 வது மேளம். மாயாமாளவகௌளையின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3, பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3)ஆகிய சுரங்கள் வருகிறன.
[தொகு] இதர அம்சங்கள்
- பழமையான இராகம். அசம்பூர்ன மேள பத்ததியில் "காசிராமக்கிரியா" என்றழைக்கப்பட்டது.
- காந்தாரத்தை அசைக்கமல் பாட வேன்டும்.
- கருணைச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
- பண்டைத்தமிழிசையில் "சாதாரிப்பண்" என்றழைக்கப்பட்டது.
- மூர்ச்சனாகாரக மேளம். இந்த இராகத்தின் நிஷாத மூர்ச்சனை கனகாங்கி மேளமாகும்.
- தாரச்தாயி காந்தாரத்திற்கு மேல் சஞ்சாரம் காண்பததரிது.
- ஜண்டசுர வரிசைப் பிரயோகங்கள், தாட்டு சுரப்பிரயோகங்கள், பிரத்தியாகத கமகங்கள் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
- இந்துஸ்தானி இசையில் "பூர்வி தாட்" என்று பெயர்.
[தொகு] உருப்படிகள்