சோதிடம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒரு துறையாகும். சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர். உலகின் பல பகுதிகளிலும் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பத்திரிகைகள் சோதிட ரீதியான அன்றாட பலன்களைத் தாங்கிவருவதே இதற்குச் சான்று.
கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்.
[தொகு] சோதிடத்துக்கான வானியல் அடிப்படை
கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் சூரியன் மற்றும் கோள்களின் சுற்றுப் பாதைகளைக் கொண்ட வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயரிடப்பட்டுள்ளன.
பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
சோதிடம் அறிவியலே. வானவியலை அடிப்படையாகக் கொண்ட அறிவியல். தமிழில் 'தெய்வம்' என்ற சொல்லுக்கு 'விதி' என்ற பொருளும் உண்டு. 'விதி'யை யார் விதித்தார்கள், யாருமல்ல. நாமேதான். அதனால்தான் சங்கப் புலவன் 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று மிக உறுதியாகக் கூறினான்.
அண்டப் பெருவெளி ஒரு காந்த மண்டலம். ஒரு காந்த மண்டலத்துக்குள் ஈர்க்கப்பட்ட நிலையில் இருக்கும் அத்தனையும் காந்தமாய் ஆகி விடுகின்றன என்று விஞ்ஞான விதிகள் கூறுகின்றன. கடவுள் என ஒன்றிருந்தால், அது அண்டவெளியில் தன்னை ஒரு காந்த சக்தியாய் வெளிப்படுத்துகிறது. பூமி மட்டும் அல்ல. சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் அத்தனையும் காந்தங்களே. இந்தக் காந்தங்கள் ஒன்றையொன்று ஈர்த்துக் கொள்வதால் தான் வான் வெளியில் அந்தரத்தில் நிற்கின்றன. இயங்கவும் செய்கின்றன. பூமி ஒரு காந்தம். அதில் உள்ள பொருட்கள் எல்லாம் காந்தமாகிவிடுகின்றன. எனவே அவைகளுக்கு ஈர்ப்பு சக்தி இருக்கின்றது. அந்த ஈர்ப்பு சக்தி நம் எல்லோரையும் கணப்பொழுது தவறாது ஈர்த்துக் கொண்டே இருக்கின்றது. இயக்கங்களுக்கு இதுவே காரணம். இதுதான் விதிக்கப்பட்டது. இதுவே விதி.
அண்ட வெளியில் பூமியால் ஈர்க்கப்பட்ட நிலையில் இருப்பதால் தெரிந்தோ தெரியாமலோ நாம் ஒரு காந்தமாகவே ஆகி விட்டோம். எனவே தான் நம் உடலில் மின் காந்த அலைகள் உண்டாகின்றன. இந்த மின் காந்த அலைகளே நம்மை இயக்குகின்றன.
ஆகவே, அண்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் நம் உடலிலும் உள்ளத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. மனதில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மனிதனின் செயல்கள் மாறுகின்றன. அதனால் விளையும் விளைவுகளே ஒருவனின் எதிர்காலம்.
முன்னர் வாழ்ந்த சித்தர்கள் அண்டத்தைத் தன்னுள்ளே கண்டு அதன் விளைவுகளைக் கணித வாயிலாகப் பகுத்துப் பிண்டத்தில் ஏற்படும் மாறுதல்களை எழுதி வைத்துள்ளனர். அது எவ்விதம் பொய்யாகும்?
கர்மவினை தாங்கள் கூறியபடி, செய்யும் வினைகளுக்கு ஏற்ப வேறுபடும். நல்லவை செய்தால் நற்பலன் உடனே விளையும். நீங்கள் ஒருவருக்குத் தக்க காலத்தில் உதவினால், "நீங்கள் நல்லா இருக்கணும்" எனும் வாழ்த்து வருகிறதே! அதுவே நல்வினைப் பயன்.
ஒருவருக்குத் தீங்கு செய்துவிட்டுப் பின்னர் மன சாட்சி குத்துகிறதே அதுவும், "நீ நல்லா இருப்பியாடா! பாவி" எனும் வசைச் சொல்லும் தீவினையின் பலன்கள்.
நீங்கள் வானத்தை நோக்கி எச்சில் துப்பினீர்கள், அது உங்கள் மேல் மீண்டு வந்து விழுந்தது. உடனே வானம் என்மீது எச்சில் துப்பியது என்று அலறி என்ன பயன்? வானம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. வானம் மிக மேலே இருக்கிறது. உங்களைப் பழிவாங்க அதற்கு நேரம் இல்லை. நீங்கள் துப்பியதை இயற்கை மீண்டும் உங்கள் மேலேயே விழுமாறு செய்தது. கைமேல் பலன்.
இங்ஙனம், நல்வினைப் பயன், தீவினைப்பயன் ஆகியவற்றை அவ்வப்பொழுதே தீர்த்து விடும்பொழுது, அவை எப்படிச் சேர்ந்து பாவ, புண்ணியமான மூட்டையாய் நிற்கின்றன?
நம் வீட்டுக்கணக்கைச் சரிபார்க்கவே நமக்கு நேரம் போதவில்லை. இத்தனை சீவராசிகளின் கணக்கைப் பார்ப்பதுதானா இறைவனின் வேலை. அப்படியே பார்த்தாலும் அவனுக்குப் பைத்தியம்தான் பிடிக்கும்.
"ஊழ்" என்பது கர்மவினை இல்லை. அணுவிலிருந்து பிரிந்து வந்தவன் அணுவிலே சேரவேண்டும். எந்த அணுவுடன் என்பதை கர்மவினை நிர்ணயிப்பதில்லை. மனிதனாகப் பிறந்தவன் ஆறு அறிவுடன் பிறந்தான். அவன் ஏழாம் அறிவை அடையவேண்டும். அதற்கு அவன் (ஞான)வினை செய்தாக வேண்டும். அவன் எந்தப் பக்குவத்தில் (திட, திரவ) இருக்கிறானோ அந்த அணுவுடன் சேருவான்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் திருவாசகத்தில் (சிவபுராணம், 26-32) இந்த அண்டம் ஒரு அணுக்கடல். இந்த அணுக்கடலில் ஏற்படும் சுழிகள், குமிழிகள் போன்றவை தான் நாமெல்லாம். அணுக்கடலின் அலைகள் ஓயாது. ஆனால் அந்த அலைகளின் இன்றைய தொகுப்புக்கள் அனைத்தும் அழிந்து வேறொரு புதிய தொகுப்பு தோன்றும். ஆனால் இந்த அணுக்கடல் அழியவே அழியாது. ஒரு பொருள் திடப் பொருளாகவோ, திரவமாகவோ, வாயுவாகவோ இருப்பதற்குக் காரணம் அப்பொருளில் உள்ள அணுக்களின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபட்ட வேகமே காரணம். இன்று நம் உடலை ஒளியின் வேகத்தில் செலுத்தினால் நாமும் ஒளியாகவே மாறி விடுவோம். எப்படி நாம் ஒளியின் வேகத்தில் சென்றால் ஒளியாகவே மாறி விடுவோமோ, அதைப் போன்றே நம் இயக்கத்தின் வேகத்தை நிறுத்தினால் இந்த அண்டத்தில் இருக்கும் ஒரே ஒரு பொருளாகிய பரிபூரணப் பரம்பொருளாகவே மாறி விடுவோம்.
ஒரு மேசையிலிருந்த்து ஒரு பொருள் ஒருவினையால் (கை வீசி தட்டுவதால்) கீழே விழலாம். இது ஒரு வினையென்றால் அது கீழே விழுவதற்கு முன் வேகமாக விரைந்து செயல்பட்டால் உடையாமல் காத்திடலாம். ஒரு வினையின் விளைவை மற்றொரு வினையின் மூலம் தடுக்கலாம் என்பது தெளிவாகிறது.
இது அனிச்சைச் செயல். இதற்கு அதிபதி முகுளம். இதையே திருமாலாக உருவகித்திருக்கிறார்கள். காக்கும் செயலல்லவா? விதியை மதியால் வெல்லலாம் என்பதுவும் இதுவே.
சோதிடம் ஒரு கைவிளக்கு. இரவில் செல்கிறோம். சாலையின் நடுவில் ஒரு பள்ளம் இருக்கிறது. கைவிளக்கு இருந்ததால் பள்ளம் தெரிகிறது. விலகிப்போய்விடுகிறோம். ஆனால் கைவிளக்கை எப்பொழுது, எந்த அளவுக்கு நம்பிப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு சோதிடத்தைப் பயன்படுத்தினால் அறிவுடையவன்.