தமிழ் முரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் முரசு சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையாகும். இது 1935 ஆம் ஆண்டில் இருந்து G.சரங்கபணி என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ஓரே தமிழ்ப் பத்திரிகை இதுவாகும். சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் 16 பத்திரிகைகளில் இதுவும் ஒன்று.
தமிழ் முரசு இந்திய சமூகத்தைப் பற்றிய செய்திகளை வழங்கி வருகின்றது இதுமாத்திரம் அன்றி பல விடயங்களை உள்ளூர் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டுக்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை பிரசுரிக்கப் படுகின்றன. இப்பத்திரிகையானது சிங்கப்பூர்த் தமிழ் சமூகத்தின் குரலாகத் திகழ்கின்றது.
உள்ளூர்ச் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டுச்செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை தமிழ் முரசில் வெளியிடப்படுகின்றன. மேலும் உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளூர் எழுத்தாளர்களின் கவிதைகளும் கதைகளும் ஞாயிறுதோறும் தமிழ் முரசில் வெளியிடப்படுகிறது. திங்கள்கிழமைகளில் மாணவர்களுக்காக மாணவர் முரசு வெளியிடப்படுகிறது. மாணவர் முரசில் தொடக்கப்பள்ளி முதல் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் வரை தங்கள் கட்டுரைகளைப் படைப்பர். வியாழக்கிழமைகளில் இளையர்களுக்கென இளையர் முரசு வெளியிடப்படுகிறது. இந்தப் பக்கத்தில் இளையர்களின் சாதனைகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் போன்ற செய்திகளைக் காணலாம். மேலும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் தமிழ்த் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதை இலக்காகக் கொண்டு நாள்தோறும் தமிழ்ப் பயிற்சிப் பாடங்கள் வெளியிடப்படுகிறது.
[தொகு] வெளியீட்டின் (பிரசுர) அளவு
2004 கணிப்பீட்டின் படி நாளொன்றிற்கு 8,504 படிகளும் (பிரதிகளும்) ஞாயிற்றுக் கிழமைகளில் 18,232 படிகளும் (பிரதிகளும்) விற்பனையாகின்றன.