தம்புள்ளை பொற்கோவில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தம்புள்ளை பொற்கோவில் ( தம்புள்ளை குகையோவியங்கள்) இது இலங்கையின் நடுப் பகுதியில் அமைந்துள்ளது. கொழும்புக்கு கிழக்கே 148 கீ.மீ தூரத்திலும் கண்டிக்கு வடக்கே 72 கீ.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. சூழவுள்ள சமநிலத்திலிருந்து சுமார் 160 மீ. உயரத்துக்கு எழும் சிறுமலை மீது இக்குகைத்தொகுதி அமையப்பெற்றுள்ளது. 80க்கும் மேற்பட்ட குகைகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. முக்கிய குகைகளாக 5 குகைகள் கொள்ளப்படுகிறது. இங்கு 153 புத்தபிரானின் சிலைகளும், 3 அரசர்களின் சிலைகளும், 4 தெய்வ சிலைகளும் காணப்படுகிறன. 4 தெய்வ சிலைகளுக்கு இந்து கடவுள்களான விஷ்ணு, பிள்ளையார் சிலைகளும் அடங்கும். 2100 சதுர மீட்டர் பரப்புள்ள சுவர் ஓவியங்களில், புத்தபிரானின் முதலாவது சொற்மொழிவு (பிரசங்கம்), புத்தபிரானின் சோதனை என்பன முக்கியமானவை.