மெய்யெழுத்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் அரிச்சுவடியில் க் தொடக்கம் ன் வரையுள்ள 18 எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் எனப்படுகின்றன. இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாக உள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துக்கள் வல்லினத்தையும், மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.
வல்லினம் | மெல்லினம் | இடையினம் |
---|---|---|
க் | ங் | ய் |
ச் | ஞ் | ர் |
ட் | ண் | ல் |
த் | ந் | வ் |
ப் | ம் | ழ் |
ற் | ன் | ள் |
மெய்யெழுத்துக்கள், உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன.