கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] ஹம்சத்வனி
- இது 29வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்ய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ இராகம் ஆகும்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
[தொகு] இதர அம்சங்கள்
- ஆரோகண அவரோகணத்தில் ம , த வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.
- மூர்ச்சனாகாரக இராகம். இதன் பஞ்சம மூர்ச்சனையே நாகஸ்வராளி இராகம் ஆகும்.
- ஜண்டை சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு இனிமையைக் கொடுக்கின்றன.
- அரங்கிசை நிகழ்ச்சிகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் பாடுவதற்கு மிகப் பொருத்தமான இராகம். வீரச்சுவை நிரம்பியது.
- முத்துஸ்வாமி தீஷிதர் அவர்களின் தந்தையாகிய இராமசாமி தீஷிதர் (1735-1817) இந்த இராகத்தைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகின்றது.
[தொகு] உருப்படிகள்
- வர்ணம் : "ஜலஜாக்ஷா" - ஆதி - மானம்புசாவடி வெங்கடசுப்பைய்யர்.
- கிருதி : "வாதாபி கணபதீம்" - ஆதி - முத்துஸ்வாமி தீட்சிதர்.
- கிருதி : "ரகு நாயகா" - ரூபகம் - தியாகராஜர்.
- கிருதி : "கந்தனைக் காணாமல்" - ஜம்பை - பெரியசாமித்தூரன்.
- திருவருட்பா : "தயாகி தந்தையும்" - கண்ட சாபு - இராமலிங்க அடிகள்.