ஒளித் தெறிப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வதுதான் ஒளி எதிர்வு அல்லது ஒளித்தெறிப்பு என்பது.
நாம் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நம் முகம் நமக்கு எவ்வாறு தெரிகின்றது? இருட்டான ஒரு அறையிலே கண்ணாடியில் நம் முகம் தெரியுமா? ஏன் தெரியவில்லை? வெளிச்சமான ஓரிடத்தில் நாம் கண்ணாடி முன்னர் நின்றால், நம் முகத்தில் ஒளிக்கதிர்கள் பட்டு எதிருவுற்று பின்னர் அவ்வொளி அலைகள் சென்று கண்ணாடியில் பட்டு கண்ணாடியால் எதிர்வுற்று நம் கண்களில் வந்து சேர்வதால் நாமே நம் முகத்தைப் பார்க்க இயலுகின்றது. இப்படி கண்ணாடியிலும், பிற பொருள்களிலும் ஒளி பட்டு எதிர்வது (தெறிப்பது) ஒளியெதிர்வாகும்.
இவ்வொளி எதிர்வுகளை நன்றாக ஆய்ந்து பல உணமைகளை நிறுவியிருக்கிறார்கள். இதில் திரு சிநெல் (Snell) என்பாரின் விதிகள் எளிதாக அறியவல்லவை. ஒளி எதிரக்கூடிய ஒரு சமதளத்தில் ஒளியானது அச்சம தளத்தின் செங்குத்துக்கோட்டுக்கு ஒரு ஒரு குறிப்பிட்ட கோணத்திலே சென்று மோதிதால், எதிர்ந்து செல்லும் ஒளியும் அதே கோணத்தில் அச்செங்குத்துக்கு கோட்டிலிருந்து விலகி எதிர் திசையில் செல்லும். இத்னை படத்தின் உதவியால் எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.