நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நேபாள கம்யுனிஸ்ட் கட்சி அல்லது மாவோயிஸ்ட் என அழைக்கப்படும் இக்கட்சியினானது அரசியல் இராணுவ அமைப்பாகும். இக்கட்சியே நேபாள மக்கள் புரட்சியினை தலைமைதாங்கி நடத்தி வருகிறது 1994 ம் ஆண்டு புஸ்ப கமால் டால் (பிரச்சண்ட) தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கட்சியும் இதன் இராணுவ அமைப்பும், நேபாளத்தில் மன்னராட்சியை ஒழித்து புதிய ஜனநாயக சமூக ஆட்சி அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்துடன் போராடுவதாக தமது அறிக்கைகள் மூலம் கூறி வருகின்றன.
இவ்வமைப்பு ஏற்கனவே நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயருடன் இயங்கிக்கொண்டிருந்த அரசியல் கட்சியில் ஏற்பட்ட பிளவின் மூலம் உண்டானது. 1996 இல் நேபாள மக்கள் புரட்சி என்ற பெயரிலான மக்கள் போராட்டத்தினை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) பிரகடனப்படுத்தியது. தொடர்ச்சொயான மாவோவாத மக்கள் போராட்ட கரந்தடி உத்திப் போர்முறையின் மூலம் நாடின் பெரும்பாலான பாகங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் இவர்கள் கொண்டுவந்துள்ளனர். நேபாள கம்யுனிஸ்ட் கட்சி யானது, Revolutionary Internationalist Movement,மற்றும் Coordination Committee of Maoist Parties and Organizations of South Asia ஆகிய அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்கிறது.
பொருளடக்கம் |
[தொகு] விமர்சனம்
- அமெரிக்க அரசின் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி உள்ளது.
- ஐரோப்பிய ஒன்றியம் 2005 ம் ஆண்டில் வெளியீட்ட அறிக்கையில் மாவோயிஸ்டுக்கள் உள்நாட்டுப்போரில் சிறுவர்களை ஈடுபடுத்துகின்றது என குற்றம்சாட்டியுள்ளது.
- மனித உரிமை அமைப்புக்கள் மாவோயிஸ்ட்கள் கொலைகள், கட்டாய ஆட்சேர்ப்பு போன்றவற்றில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
[தொகு] கட்சியின் சுலோகங்கள்
- "உலகத் தொழிலாளரே, ஒன்றுபடுங்கள்!"
- "நேபாள மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!
- "மார்க்சியமும் லெனினியமும் மாவோவிசமும் பிரச்சண்ட பாதையும் நீடூழி வாழ்க "