இராணி மங்கம்மாள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவனான அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் 1688 ஆம் ஆண்டு காலமானபோது அம்மன்னனின் மகனான விசயரங்க சொக்கநாதனுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. அவன் சார்பில் அவனுடைய பாட்டியும், சொக்கநாத நாயக்கனின் மனைவியுமான மங்கம்மாள் பகர ஆளுனராகப் பதவி ஏற்றுக்கொண்டு, இராணி மங்கம்மாள் என்ற பெயரில் 1706 வரை ஆட்சி நடத்தினார்.