இராணி மீனாட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இராணி மீனாட்சி நாயக்க அரசிகளுள் ஒருவர். இவளது ஆட்சிக் காலம் 1731 முதல் 1739 வரை ஆகும். விஜயரங்க சொக்கநாத நாயக்கனின் மனைவி. அவன் குழந்தைகள் எதுவுமின்றி இறந்தால் ஆட்சிக்கு வந்தாள். சந்தாசாகிப்பின் பணியாட்களால் கைது செய்யப்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டாள். இவளுடன் மதுரை நாயக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.