காதல் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காதல் | |
இயக்குனர் | பாலாஜி சக்திவேல் |
---|---|
தயாரிப்பாளர் | ஷங்கர் |
கதை | பாலாஜி சக்திவேல் |
நடிப்பு | பரத் சந்தியா சுகுமார் |
இசையமைப்பு | யோசுவா சிறீதர் |
வினியோகம் | S Pictures |
வெளியீடு | 2004 |
மொழி | தமிழ் |
IMDb profile |
காதல் திரைப்படம் 2004 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. மேலும் இத்திரைப்படம் தென்னிந்தியத் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் விருதான பில்ம்பேரின் 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
[தொகு] வகை
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மோட்டார் வண்டிகள் திருத்தும் கடையினை வைத்திருப்பவர் முருகன் (பரத்). எப்பொழுதும் தன் வேலையினைக் கவனிப்பது அவரது குறிக்கோள். ஆனால் திடீரென அவர் சந்திக்கும் அப்பகுதியில் வசிக்கும் ஜஸ்வர்யா (சந்தியா) முருகன் மீது காதல் கொள்கின்றார். ஆரம்ப காலங்களில் இதனைப் பொருட்படுத்தாது இருக்கும் முருகன் சிறிது காலத்தில் ஜஸ்வர்யா மீது காதல் கொள்கின்றார். இதற்கிடயில் ஜஸ்வர்யாவின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்தனர். கவலையில் இருக்கும் காதல் ஜோடிகளான முருகனும் ஜஸ்வர்யாயும் அவ்வூரை விட்டே தலைமறைவாக முடிவு செய்கின்றனர். இவர்கள் தங்குவதற்காக முருகனின் நண்பனான ஸ்டீபன் (சுகுமார்) அனைத்து வசதிகளையும் செய்கின்றான். திடீரென ஜஸ்வர்யாவைத் தேடிவரும் அவர் பெற்றோர் இவர்கள் காதல் கொண்டிருப்பதை அறிகின்றனர். ஆரம்பத்தில் இருவரையும் சேர்த்து வைப்பதாகக் கூறுக்கொள்ளும் அவர்கள் பின்னர் முருகனை அடித்து சித்திரவதை செய்கின்றனர். சிறிது காலங்கள் கழித்து முருகன் பைத்தியமாக தெருக்களில் அலைந்து திரிவதனைக் கண்டு கொள்ளும் ஜஸ்வர்யா மற்றும் அவரது பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப அவர் மணம் செய்த கணவர் இருவரும் முருகனைத் தம் இல்லத்திற்கே அழைத்துச் செல்கின்றனர்.