காத்திருப்பேன் உனக்காக
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காத்திருப்பேன் உனக்காக | |
இயக்குனர் | எஸ். வி. சந்திரன் |
---|---|
தயாரிப்பாளர் | எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜ் |
கதை | எம். செல்வராஜ் |
திரைக்கதை | நவாலியூர் நா. செல்லத்துரை |
நடிப்பு | என். சிவராம் கீதாஞ்சலி ரவி செல்வராஜ் விஸ்வநாதராஜா நவாலியூர் நா. செல்லத்துரை ருக்மணி தேவி எம். எம். ஏ. லத்தீப் தர்மலிங்கம் |
இசையமைப்பு | எம். முத்துசாமி |
ஒளிப்பதிவு | எஸ். தேவேந்திரா |
படத்தொகுப்பு | எஸ். வி. சந்திரன் |
வினியோகம் | ஜெயேந்திரா மூவிஸ் |
வெளியீடு | 1977 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
1977ல் இலங்கையில் திரையிடப்பட்ட இத்திரைப்படம், சிற்ந்த நடிப்பு,இனிய பாடல்கள், நல்ல திரைக்கதை என்று இருந்தபோதிலும், நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
மலையகத்தில், வத்தேகம எனும் இடத்தைச்சேர்ந்த மூன்று சகோதரர்கள் -எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜா என்பவர்கள் தங்கள் கலைத்துறை ஆசான் நவாலியூர் நா. செல்லத்துரை யின் கலைத்தாகத்துக்கு தங்கள் பங்களிப்பாக இத்திரைப்படத்தைத் தயாரித்தார்கள். ஒரு சகோதரரான செல்வராஜிடம் இருந்த கதைக்கு, திரைக்கதை, வசனம், பாடல்கள் என்பனவற்றை எழுதும் பொறுப்பு ஆசிரியரான நவாலியூர் செல்லத்துரை அவர்களிடமே விடப்ப்பட்டது. அவர் சிறப்பாகவே தன் பணிகளைச் செய்தார்.
கண்டியில் வெளிவந்த "செய்தி" பத்திரிகையின் ஆசிரியரான நாகலிங்கத்தின் மகனான என். சிவராம் (தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறார்) இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். அவரோடு கீதாஞ்சலி, ஸ்ரீதேவி, விஸ்வநாதராஜா, நவாலியூர் நா. செல்லத்துரை, செல்வராஜ், சிங்கள நடிகை ருக்மணி தேவி போன்ற பலர் நடித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக இருந்த அனுபவத்துடன் எஸ். வி. சந்திரன் இத்திரைப்படத்தின் இயக்குனராகவும், படத்தொகுப்பாளராகவும் செயற்பட்டார். எஸ். தேவேந்திரா படப்ப்டிப்பாளராகவும், எம். முத்துசாமி இசை அமைப்பாளராகவும் இணைந்து கொண்டார்கள். ஜோசப் ராசேந்திரன், சுஜாதா ஆகியோர் பாடல்களைப் பாடினார்கள்.
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
[தொகு] குறிப்பு
- இத்திரைப்படம் யாழ்ப்பாணம் வின்சர் திரை அரங்கிலேயே அதிக் நாடக்ள் காண்பிக்கப்பட்டது. இறுதிக்காட்சியில் சிவராமின் நடிப்பு உச்சமாகக் கருதப்பட்டது.
- இத்திரைப்படத்தில் தாய் வேடத்தில் நடித்த பிரபல சிங்கள நடிகை ருக்மணி தேவிக்கு, பிரபல வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் பின்னணிக்குரல் கொடுத்தது மிகச் சிறப்பாக இருந்தது.