கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகம் ஆகும். இது ஔடவ- வக்ர ஷாடவ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
[தொகு] இதர அம்சங்கள்
- ஆரோகணத்தில் க , த வர்ஜம். அவரோகணத்தில் த மட்டும் வர்ஜம்.
- ஏகசுருதி ரிஷபம், இந்த இராகத்தின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. இதற்கு கௌளை ரிஷபம் என்றே பெயர்.
- கன பஞ்சக இராகங்களாகிய நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, சிறீ ஆகியவற்றில் இது 2 வதாக வருகின்றது.
- தானம் அல்லது மத்திமகால ஆலாபனை இசைக்கும் பொழுது இவ்விராகத்தின் சாயை நன்கு வெளிப்படுகின்றது.
- பல இசை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான இராகம் இது ஆகும். (கௌடை என்று முன்பு அழைக்கப்பட்டுள்ளது).
[தொகு] உருப்படிகள்
- வர்ணம் : "செலிமி கோரி" - ஆதி - வீணை குப்பையர்.
- பஞ்சரத்தின கீர்த்தனை : "துடுகுகல" - ஆதி - தியாகராஜர்.
- கீதம் : "பூரணியே" - ஆதி - அருணாச்சல அண்ணாவியார்.
- கிருதி : "ப்ரணமாம்யகம்" - ஆதி - மைசூர் வாசுதேவச்சாரியார்.
- கிருதி : "ஆண்டருள்வாய்" - ஆதி - தண்டபாணி தேசிகர்.