டக்ளஸ் தேவானந்தா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda, நவம்பர் 10, 1957; யாழ்ப்பாணம், இலங்கை) ஒரு இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆவார். இவர் 2000 -2001 மற்றும் 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் இன் அமைச்சராகக் கடமையாற்றினார். ஆரம்பத்தில் ஈழப் போராளியாக இருந்து பின்னர் ஜனநாயக அரசியலுக்கு மாறியவர். இவரின் அரசியல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக பிரதிநிதித்துவ கொள்கைக்கு நேரடி சவாலாக இருப்பதோடு, அக்கொள்கையையும் மறுதலிக்கின்றது.
[தொகு] அமைச்சர் பணி
டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசில் அமைச்சராக பணியாற்றியவர். அமைச்சராக, டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய இடங்களில் IT Park ஐ உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்.
வவுனியாவில் கற்பகபுரம் புலன்பெயர்ந்தோர் மீள் குடியேற்றத்திற்கான ஒருதொகைக்காணிகளை இலங்கை அரசின் ஒப்புதலுடன் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கி வீடுகளைக் கட்டுவதற்கும் உதவிகளைப் பெற்றுக்கொடுத்தாரெனினும் வவுனியா செட்டிக்குளம் Relocation திட்டமானது இலங்கை இராணுவ அதிகாரிகளின் ஒப்புதிலின்மையால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.