பரணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும். பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு.
[தொகு] பகுதிகள்
பொதுவாகப் பரணிகள் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.
- கடவுள் வாழ்த்து
- கடை திறப்பு
- காடு பாடியது
- கோயில் பாடியது
- தேவியைப் பாடியது
- பேய்ப்பாடியது
- இந்திரசாலம்
- இராச பாரம்பரியம்
- பேய் முறைப்பாடு
- அவதாரம்
- காளிக்குக் கூளி கூறியது
- போர் பாடியது
- களம் பாடியது
- கூழ் அடுதல்
[தொகு] பரணிகள்
- கலிங்கத்துப் பரணி
- தக்கயாகப் பரணி
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- இலக்கிய நூல் வகைகள்
- தமிழ் சிற்றிலக்கியங்கள்