போர்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லெப்டினன்ட் கேணல் போர்க் (11/11/1959 - 23/11/1990; ஆறுமுகத்தான் புதுக்குளம், ஓமந்தை, வவுனியா) எனும் இயக்கப்பெயரைக்கொண்ட மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
கரும்புலியான இவர் நவம்பர் 23-1990 அன்று மாங்குளத்தில் சிறிலங்கா இராணுவப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார்.