மகேந்திரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மகேந்திரன் சிறந்த தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். ஜெ.அலெக்ஸாண்டர் என்ற இயற்பெயரினை கொண்டவர். இவருடைய படங்கள்,மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதை மற்றும் அழகான காட்சியமைப்புக்கு பெயர் பெற்றவை.
மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் உதிரிப்பூக்களும் ஒன்றாகும்.
திரைப்பட இயக்குனராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார். இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் பணியாற்றினார்.
பொருளடக்கம் |
[தொகு] படைப்புகள்
[தொகு] திரைப்படங்கள்
- முள்ளும் மலரும் (1978)
- உதிரிப்பூக்கள் (1979)
- பூட்டாத பூட்டுக்கள்(1980)
- ஜானி (1981)
- நெஞ்சத்தை கிள்ளாதே(1982)
- மெட்டி
- நண்டு (1981)
- கண்ணுக்கு மை எழுது
- அழகிய கண்ணே
- ஊர்ப் பஞ்சாயத்து
- கை கொடுக்கும் கை
- சாசனம் (2006)
- அர்த்தம் (தொலைக்காட்சி நாடகம்)
- காட்டுப்பூக்கள் (தொலைக்காட்சி நாடகம்)
[தொகு] கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
- தங்கப்பதக்கம் - கதைவசனம்
- நாம் மூவர் - கதை
- சபாஷ் தம்பி - கதை
- பணக்காரப் பிள்ளை - கதை
- நிறைகுடம் - கதை
- திருடி - கதை
- மோகம் முப்பது வருஷம் - திரைக்கதை வசனம்
- ஆடு புலி ஆட்டம் - கதை வசனம்
- வாழ்ந்து காட்டுகிறேன் - கதை வசனம்
- வாழ்வு என் பக்கம் - கதை வசனம்
- ரிஷிமூலம் - கதை வசனம்
- தையல்காரன் - கதை வசனம்
- காளி - கதை வசனம்
- பருவமழை -வசனம்
- பகலில் ஒரு இரவு -வசனம்
- அவளுக்கு ஆயிரம் கண்கள் - கதை வசனம்
- கள்ளழகர் -வசனம்
- சக்கரவர்த்தி - கதை வசனம்
- கங்கா - கதை
- ஹிட்லர் உமாநாத் - கதை
- நாங்கள் - திரைக்கதை வசனம்
- challenge ramudu (தெலுங்கு) - கதை
- தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) -கதை
- சொந்தமடி நீ எனக்கு -கதை வசனம்
- அழகிய பூவே - திரைக்கதை வசனம்
- நம்பிக்கை நட்சத்திரம் -கதை வசனம்
[தொகு] புத்தகங்கள்
- சினிமாவும் நானும் (2004)