யாழ்ப்பாண வைபவ விமரிசனம் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்னும் சிறுநூல் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிகால உண்மைச்சரித்திர ஆராய்ச்சியையும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் பெரிய நூலின் உள்ளுறை ஆராய்ச்சியையும் கையாளுவது. இந்த ஆராய்ச்சி நூலை எழுதியவர் சுவாமி ஞானப்பிரகாசர். இது அச்சுவேலியில் 1928 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட சரித்திர முரண்பாடுகளை இந்த நூலில் எடுத்துக் காட்டினார்.
சன்மார்க்கப்போகினி பத்திரிகைகளில் அவ்வப்போது பாகம் பாகமாய் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இச்சிறு நூல் வெளியிடப்பட்டது.