இந்தியத் துணைக்கண்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திய உபகண்டம் என்பது, இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளத்தின் சில பகுதிகள், பூட்டான், மியன்மார் மற்றும் சீனாவினால் கட்டுப்படுத்தப்படுகின்ற, பிரச்சினைக்குரிய பிரதேசப்பகுதிகள் சிலவற்றையும் உள்ளடக்கிய, தெற்காசியா விலுள்ள ஒரு புவியியற் பிரதேசமாகும்]].
உப கண்டம் என்ற எண்ணக்கரு, மேற்படி பிரதேசம், ஒரு தனியான, ஆசியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறாக்கப்பட்ட tectonic plate ஒன்றின் மேல் அமைந்திருப்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த உபகண்டத்தின் தென் பகுதி, மிகப் பெரியதொரு தீபகற்பமாக (குடாநாடு) அமைந்துள்ள அதே வேளை, வடக்கிலே, இமயமலைத் தொடரினால், சீனாவினதும், மொங்கோலியாவினதும் குளிர்ப் பிரதேசங்களிலிருந்து தனிப்படுத்தப்பட்டுள்ளது. இம் மலைத் தொடர், இந்தப் பிரதேசத்துக்கும், ஆசியாவின் ஏனைய பகுதிகளுக்குமிடையே ஒரு கலாச்சார, புவியியற் தடுப்பாகவும், செயல்படுகிறது.
இந்தியாவின் தென்முனைக்கு அப்பால் அமைந்துள்ள, இலங்கைத் தீவும், இதே தட்டின் மேல் அமைந்துள்ளதால், சில சமயம் இந்திய உபகண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.