சுத்தானந்த பாரதியார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 - மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர். கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேட நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவர். சுத்தானந்தர் தமிழ் நாடு, சிவகெங்கையில் பிறந்தார்.
பொருளடக்கம் |
[தொகு] ராஜராஜன் விருது
1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜ ராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான "பாரத சக்தி மகாகாவியம்" அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும்.
[தொகு] திருக்குறள் மொழிபெயர்ப்பு
திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் தெய்வநெறி கழகத்தாரால் வெளியிடப்பட்டது.
[தொகு] இதர விருதுகள்
- சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.