Wikipedia பேச்சு:தமிழ் விக்கிபீடியா இவை அன்று
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] கருத்து வேறுபாடுகள்
- ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று.
தமிழ் மொழி வழியான அனைத்து துறை சிந்தனைகள், தகவல்களை குவிப்பது தமிழ் விக்கிபீடியாவின் அடிப்படை நோக்கம் தான் என்றாலும், இது ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதை நினைவில் கொள்ளலாம். இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், தமிழ் விக்சனரிக்குப் பங்களிக்கலாம். அளவுக்கு மிஞ்சிய தூய தமிழ் நடையை கட்டுரைகளில் திணிப்பதைத் தவிர்க்கலாம். இது குறித்த அளவுக்கு அதிகமான கலந்துரையாடல்கள் சில நேரங்களில் கட்டுரைகளுக்கு பங்களிப்பதிலிருந்து, பயனர்களை திசை திருப்பக் கூடும்.
-
- தமிழ் விக்கிபீடியா நிச்சியமாக தமிழின் ஒரு வளர்ச்சி முனைதான். தூய தமிழ் இது, தூய தமிழ் இதுவல்ல என்பதற்கு இறுதியான எல்லை கிடையாது. சோ, என்ன மெசேச் சொல்ல வருறன் என்றால் தமிழ் விக்கிபீடியா இயன்ற வரை எளிய தமிழ் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும். --Natkeeran 14:03, 14 ஜூன் 2006 (UTC)
- இந்த கொள்கையை வேறுவிதமாக சொல்ல முயலுவோம். மொழி வளர்ச்சி என்பது தமிழ் விக்கிபீடியாவின் மைய நோக்கம் அல்ல என்றாலும் கூடியவரை நல்ல தமிழைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இத்தேவையை பயனர்கள் மீது திணிக்க வேண்டாம். விரும்பும் பயனர்கள் எப்போதும் போல் வாக்கியங்களை மாற்றியமைக்கலாம். தனிப்பட்ட முறையில் எனது விருப்பத்தை இங்கே ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். இது தொடர்பாக பிறர் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். -- Sundar \பேச்சு 15:03, 14 ஜூன் 2006 (UTC)
- தமிழ் விக்கிபீடியா நிச்சியமாக தமிழின் ஒரு வளர்ச்சி முனைதான். தூய தமிழ் இது, தூய தமிழ் இதுவல்ல என்பதற்கு இறுதியான எல்லை கிடையாது. சோ, என்ன மெசேச் சொல்ல வருறன் என்றால் தமிழ் விக்கிபீடியா இயன்ற வரை எளிய தமிழ் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும். --Natkeeran 14:03, 14 ஜூன் 2006 (UTC)
- பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும்.
-
- பொது வழக்கு என்று ஒன்று எல்லா விடயங்களிலும் இருக்க மாட்டாது. குறிப்பாக இலங்கை வழக்கு, தமிழக வழக்கு என்று உச்சரிப்பில், சொற் பிரயோகங்களில் இருக்கின்றது. அனைத்து விடயங்களிலும் தமிழக வழக்கை பொது வழக்கு என்பதோ, அல்லது இலங்கை வழக்கை தமிழ் விக்கிபீடியா வழக்கு ஆக்குவதோ ஏற்றுக்கொள்ளப்படகூடியதாக அமையாது. இதை நோக்கிய ஒரு புரிந்துணர்வு தேவை. இப்பொழுது உச்சரிப்பை பொறுத்தவரை யார் கட்டுரையை இடுகின்றார்களோ அந்த உச்சரிப்பை கட்டுரையை பின்னர் மேம்படுத்துவர்கள் பின்பற்றினால் நன்று என்ற புரிந்துணர்வில் இயங்குகின்றோம். எனினும் இது ஒரு நிரந்தர தீர்வாக அமையுமா?
-
- தமிங்கிலிஸ் பொதுவழக்காக தமிழ்நாட்டில் வரக்கூடும், அதற்காக அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? எனவே ஒவ்வொரு விடயத்தையும் தனித்தனியாக ஆய்ந்து ஒரு நிலை எடுக்க வேண்டும். தமிழுக்கு ஒரு நடுவண் அமைப்பு என்று ஒன்று அறிதியாக கிடையாது. எனினும் தமிழ்நாடு அரசே அப்படி செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பித்தக்கது. --Natkeeran 14:03, 14 ஜூன் 2006 (UTC)
-
-
- இக்கொள்கையை அதிகம் அலசாமல் நானே ஏற்றினேன். இது பற்றி கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். உங்கள் ஐயப்பாடு மிகவும் சரி. பொது வழக்கு என்பதற்கு மாற்றாக "தரப்படுத்தப்பட்ட" அல்லது "முறைசார்" என்று குறிப்பிடலாமோ? மேலும், த.வியில் நடை விதிமுறைகள் இல்லாதவிடங்களில் மட்டும் இது செல்லுபடியாகும்படி செய்யலாமா? -- Sundar \பேச்சு 15:03, 14 ஜூன் 2006 (UTC)
-
தலைப்பு சற்று உறுத்துகின்றது, பின்வரும் தலைப்பையும் பரிசீலியுங்களேன்: தமிழ் விக்கிபீடியா இவை அன்று --Natkeeran 14:03, 14 ஜூன் 2006 (UTC)
எழுத்து சீர்திருத்தம் செய்ய தமிழ் நாடு அரசுக்கும், சிறீலங்கா அரசுக்கும் உரிமை இருக்கு (மக்களின் வாக்குரிமை பெற்றதால்), ஆனால், யுனிக்கோடு, infitt போன்றவைகளுக்கு கிடையாது, எனினும், இவ்வகை நிறுவனங்கள் பொதுமக்களின் ஒப்புதலோ, அல்லது அவர்களுடன் கலந்தாலோசிக்காமலோ, எத்தனையோ மாற்றங்களைப் புகுத்தியிருக்கின்றன. உண்மையான தமிழ் நலம் பேணும் அறிஞர்களின் கருத்துகளைக் கேளாமல் இயங்கி வந்துள்ளன (இராம.கி, மணிவண்ணன் போன்றவர்களைக் கேட்டால் தெரியும்). எனவே இங்கு இது ஒரு கொளகையாக வைத்துள்ளது சரியா என்று விளங்க வில்லை. விக்கியில் பங்கு கொள்பவர்கள், விக்கி பீடியாவின் ஆக்கங்களால் மக்கள் எப்படி பயன் பெறுவார்கள் என்பதே தலையாய குறிக்கோள்களுள் ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன். உண்மையான பயன்பாடு கருத வேண்டும்.--C.R.Selvakumar 23:17, 16 ஜூன் 2006 (UTC)செல்வா
- செல்வா, ஒரு திருத்தம். மக்களின் வாக்குரிமை பெற்றதால் சீர்திருத்தம் செய்ய உரிமை உண்டென்றால், அந்த உரிமை சிறீலங்கா அரசுக்கு இல்லை. அது தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிந்தெடுக்கப்பட்டதல்ல.--Kanags 23:33, 16 ஜூன் 2006 (UTC)
-
- கனகு, என்கருத்தும் அதுவே. நான் சிறீலங்கா அரசு என்று எழுதி பிறைக் குறிகளுக்குள் எழுதியதன் பொருளே அதுதான். அதிலும் இன்னும் பல கோணங்கள் உண்டு. பெரும்பான்மை ஒருக்கால் உண்மையிலேயே ஒரரசு பெற்றிருப்பதாலும் அது எது வேண்டுமானாலும் செய்யவும் கூடாது, உரிமையும் கிடையாது. கடமை, பொது நலம், பொறுப்புகள் என பல இருக்கின்றன. --C.R.Selvakumar 00:28, 17 ஜூன் 2006 (UTC)செல்வா