மனுஷ்ய புத்திரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மனுஷ்ய புத்திரன் (Manushyaputhiran)(பிறப்பு - 1968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார்.தற்போது சென்னையில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழை நடத்தி வருகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] கவிதைத் தொகுப்புகள்
- மணலின் கதை(2005)
- இடமும் இருப்பும் (1998), நீராலானது (2001)
- என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993)
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
[தொகு] கட்டுரைத் தொகுப்புகள்
- காத்திருந்த வேளையில் (2003)
- எப்போதும் வாழும் கோடை (2003).
[தொகு] விருதுகள்
தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதிவரும் அவருக்கு 2002இல் இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது. 2003இல் அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருதையும், 2004இல் இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருதையும் பெற்றிருக்கிறார்.