ஆபிரகாம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அபிரகாம் (கி.மு. 1900, அரபு: ابراهيم இப்ராகிம்) இஸ்ரவேலரின் ஆரம்ப கர்த்தாகவாகும். இப்பெயர் அனேகரின் தந்தை எனப் பொருள்படும். இவர் கிறிஸ்தவம்,யூத மதங்களில் முக்கிய நபராக கருதப்படுகிறார். மேலும் இஸ்லாம் சமயத்தில் முக்கிய தீர்க்கதரிசியாகவும் கொள்ளப்படுகிறார். இவரது வாழ்கை வரலாறு விவிலியத்தின் ஆதியாகமம் மற்றும் திருக்குர்ஆன் என்பவற்றில் காணப்படுகிறது.
யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம், பஹாய் சமயங்கள் ஆபிரகாமிய சமயங்கள் என சிலவேலைகளில் கூட்டாக அழைக்கப்படுவது, இச்சமயங்களின் புனிதநூல்களில் அபிரகாமுக்கு கொடுக்கப்ப்ட்டுள்ள முக்கியத்துவத்தினாலாகும். பழைய ஏற்பாட்டிலும் திருக்குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளப்படி, அபிரகாம் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டு, ஆசீவதிக்கப்பட்டவராவார். இவருக்கு கடவுள் மகத்தானவற்றை கொடுப்பதாக வாக்குறுதியளித்தார். கிறிஸ்தவர்கள் அபிரகாமை விசுவாசத்தின் தந்தை என அழைகிறார்கள். பஹாய் சமயத்தின்படி, தோற்றுவிப்பாளர் அபிராமுக்கு கேத்துராள் என்ற மனைவி மூலம் தோன்றிய வம்சத்தில் வந்த ஒருவராகும்.