கர்னூல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கர்னூல் | |
மாநிலம் - மாவட்டங்கள் |
ஆந்திரப் பிரதேசம் - கர்னூல் |
அமைவிடம் | 15.83° N 78.05° E |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
ச.கி.மீ
|
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2001) - மக்களடர்த்தி |
267,739 - /ச.கி.மீ |
கர்னூல் (ஆங்கிலம்:Kurnool), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இது ஆந்திராவின் மேற்குமத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது துங்கபத்ரா ஆறு மற்றும் ஹந்திரி ஆறுகளின் தென்கரையில் அமைந்துள்ளது. 1953 முதல் 1956 வரை கர்னூலே ஆந்திராவின் தலைநகரமாக இருந்தது.
[தொகு] புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 15.83° N 78.05° E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 274 மீட்டர் (898 அடி) உயரத்தில் இருக்கின்றது.
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 267,739 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குர்நூல் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குர்நூல் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.