நீராவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நீரை வெப்பப்படுத்தும்போது அது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுகின்றது. இந்த வாயு நிலையிலுள்ள நீரே நீராவி எனப்படும். இவ்வாறு திரவநிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுதல் ஆவியாக்கம் என்று குறிக்கப்படும். நீர் 100 பாகை செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் ஆவியாக மாறும்.