புனித பவுல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புனித பவுல் | |
---|---|
வெளி இனத்தவரின் புனிதர் |
|
பிறப்பு | கிபி 9 சிசிலியாவின் தர்சு |
இறப்பு | கிபி 67 உரோம் |
மதிக்கப்படுவது | ரோ.க.,கி.ம.தி.,மறுசீரமைப்பு திருச்சபைகள் |
பிரதான ஆலயம் | மதிலுக்கு வெளியான பவுல் பசிலிக்கா உரோம் |
திருவிழா | சனவரி 25, ஜூன் 29, நவம்பர் 18 |
![]() |
புனித பவுல் (சின்னப்பர்) கிறிஸ்தவ புனிதராவார். இவரது இயற் பெயர் சவுல் என்பதாகும். இவர் கி.பி. 9 தொடக்கம் 67 வரை வாழ்ந்தார். சிசிலியாவின் தர்சு பட்டணதை சேர்ந்த உரோம குடிமகனாவார். இவர் யூத மதத்தை பின்பற்றி வந்தார். இவர் ஆரம்பத்தில் அக்காலத்தில் இயங்கிய கிறிஸ்தவரை தேடி அழிக்கும் குழுவின் தலைவராக பணியாற்றினார். தமஸ்குவில் கிறிஸ்தவர் பலர் இருப்பதாக அறிந்து அவரகளை கைதுசெய்து எருசலேமுக்கு கொண்டுவருவதற்கான ஆனயை பெற்றூக்கொண்டு தமஸ்கு செல்லும் வழியில் ஓளிவடிவில் இயேசு அவருக்கு தோன்றினார்.
பின்னர் பவுல் இயேசுவை விசுவாசித்து மனம்மாறினார். இயேசுவை ஏற்றபின்னர் மறைப்பரப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பவுல் ஆரம்ப கிறிஸ்தவ மறைப்பரப்புனர்களில் மிக முக்கியமானவராக கருதப்படுகிறார். கிறிஸ்த்து எல்லோருக்கும் பொதுவானவர் யூதருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத்தை வலியுருத்தினார். எனவே இவர் பிர இனத்தவரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] மன மாற்றத்துக்கு முன்
புனித பவுல் தன்னைபற்றி விவிலியத்தில் எழுதிய்ள்ள படி, அவர் சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு உரோம பிரசயாவார். அவரது குடும்பம் மிகவும் செல்வந்த குடும்பமாகும். இஸ்ரவேலின் பெஞ்சமின் கோத்திரத்தை சேர்ந்த்த ஒரு பரிசேயராவார்.[1]. இளமையில் யூத மத சட்டங்களை கற்று தேர்ந்தார் [2].
அப்போது கிறிஸ்தவம் பரவ தொடங்கிய காலமாகும். பல கிறிஸ்தவர் தமது நம்பிக்கை காரணமாக கொலை செய்யப்பட்டனர். பவுல் கிறிஸ்தவரை அழிக்க திடங்கொண்டு ஆட்சியாளரிடம் அதற்கான ஆனையை பெற்றுக்கொண்டு கிறிஸ்தவரை துன்புறுத்தினார் [3]. கிறிஸ்தவர் இவனது பெயருக்கு அஞ்சினார்கள். இவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது தமஸ்குவில் கிறிஸ்தவர் இருப்பதாக கேள்விப்பட்டார். அங்கிருக்கும் கிறிஸ்தவரை கைது செய்து எருசலேம் நகருக்கு அழைத்து வரும்படி தமஸ்குவிற்கு புறப்பட்டான்.
[தொகு] மனமாற்றம்
தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவரைச் சுற்றிப் பிரகாசித்தது. சவுல் தரையிலே விழுந்தார். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே பேசிகிற ஒலியைக் கேட்டார். அதற்கு சவுல்: ஆண்டவரே, நீர் யார், என்றார். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். சவுல் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றார். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனோடு பிரயாணம்பண்ணின மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது பார்வையற்று இருந்தார்.கூட இருந்தவர்கள் சவுலை கைலாகுகொடுத்து, தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். சவுல் மூன்று நாள் பார்வை இல்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தார். பின்பு கர்த்தர் அன்னியா என்பவரை சவுலிடம் அனுப்பினார். அப்பொழுது அனனியா போய், சவுல் இருந்த வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். பின்பு அவன் உணவுண்டு பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீடருடனே சிலநாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள். [4]
[தொகு] மறைப்பரப்பு
பவுலின் வாழ்வில் அகவை 45-57 வரையான காலப்பகுதி மிகவும் முக்கியமானதாகும். இக்காலப்பகுதியில் மூன்று மறைப்பரப்பு பயணங்களை மேற்கொண்டார். இவயனத்தும் அந்தியோக்கியாவில் ஆரம்பித்து எருசலேம் நகரில் முடிவடந்தன.
[தொகு] கடைசி நாற்கள்
[தொகு] கைது
பவுல் எருசலேமில் இருந்தபோது, யூதரல்லாதோரை தேவலயத்துக்குள் கூட்டிவந்ததாக பொய்யுரைத்து யூதர்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப்பிடித்து, அவனைத் தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டுபோனர்கள். அவர்கள் அவரைக் கொலைசெய்ய எத்தனித்தனர். எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறதென்று போர்ச்சேவகரின் சேனாபதிக்குச் செய்திவந்தது. உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடிவந்தான். சேனாபதியையும் போர்ச்சேவகரையும் மக்கள் கூட்டம் கண்டபோது பவுலைஅடிக்கிறதை நிறுத்தினார்கள். சேனாபதி அருகேவந்து பவுலைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான். அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள் சந்தடியினாலே உண்மையை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று, இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் பவுலைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது.
[தொகு] கொலைச் சதி
அவர்கள் பவுலைக்; கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், பவுல் சேனாபதியிடம் தான் மக்களுடன் பேசும்படி அனுமதியை பெற்று கோட்டை படிகள் மேலிருந்தவாரு மக்களுக்கு இயேசுவை போதித்தார்.இத்னால் மேலும் கோபமடந்த கூட்டம் மேலும் உக்கிரமாய் பவுலை கொலை செய்யும் படி கூக்குரலிட்டனர். பின்னர் நடந்த விசாரனைகளில் பவுலை குற்றப்படுத்த முடியாமல் போகவே, யூதர் விசாரனயின் போது கொலை செய்ய சதி செய்தனர். இதை அறிந்த சேனாதிபதி பவுலை மிகுந்த காவலுக்கு மத்தியில் செசரியாபட்டணத்திற்குப் தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்தில் அனுப்பினான்.
[தொகு] சிறைவாசம்
செசரியாபட்டணத்தில் நடந்த விசாரனகளிலும் பவுல் வெற்றிகொண்டார். என்னும் அவர் விடுதலைக்கா கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தாத காரணத்தினால் தேசாதிபதியாகிய பேலிக்ஸ் பவுலை இரண்டு வருடம் சிறையிலிட்டார். இதற்குள் புதிய தேசதிபதியாக பொர்க்கியுபெஸ்து என்பவன் வந்து யூதரை சந்தோசப்படுத்தும் நோக்கில் பவுலின் சிறைக்காலத்தை நீடித்தான்.
[தொகு] மீள் விசாரணை
புதிய தேசாதிபதியாகிய பேலிக்சை அனுகிய யூதர் வழியில் பவுலை கொலைச் செய்யும் உள்நோக்கத்துடன் விசாரனயின் பொருட்டு பவுலை எருசலேமுக்கு அனுப்பும் படி கேட்டனர். ஆனால் பவுல் தேசாதிபதியாகிய பேலிக்சிடம் உரோமில் அரசன் முன்பாக தனது விசாரன நடத்தும் படி உத்தரவை பெற்று எருசலேம் செல்வதை தவிர்த்தார். செசரியாபட்டணத்திலிருந்து உரோம் நகர் வரை பவுலை ஒருகப்பலில் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. அனால் கப்பல் வழியில் புயலை எதிர்கொண்டு பல நாற்களாக கடலிருந்த்து. பின்பு உரோமை வந்த பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடமுழுவதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.தேசாதிபதியாகிய பேலிக்ஸ் பவுல் மீது பற்று கொண்டவராக காணப்பட்டமையாலும், உரோம் நகரில் யூத மதத்தினர் பெரும்பான்மயாக இல்லாத காரணத்தினாலும் பவுல் மீதான வழக்கை யூதர் கைவிட்டனர்.
[தொகு] மரணம்
பவுலின் மரணம் பற்றிய தகவ்ல் விவிலியத்தில் காணப்படவிலலை. என்னினும் அவர் உரோமில் வேத சாட்சியாக மரித்தார் என்பது மரபு.
[தொகு] உசாத்துணை
- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் பவுல்
- தமிழ் விவிலியம் அப்போஸ்தலர் நடபடிகள்
- தமிழ் விவிலியம் பிலிப்பியருக்கு எழுதின நிருபம்