கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிசம்பர் 10, கிரிகோரியன் ஆண்டின் 344வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 345வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 21 நாட்கள் உள்ளன. இன்று மனித உரிமைகள் நாள்.
[தொகு] நிகழ்வுகள்
- 1868 - உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் (traffic lights) லண்டனில் பாராளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.
- 1901 - முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 1906 - அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
- 1936 - இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்ட் மன்னன் முடி துறப்பதாக அறிவிப்பு.
- 1975 - ரஷ்யரான அந்திரேய் சாகரொவ் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
- 1984 - தென்னாபிரிக்க கறுப்பின மதகுரு டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
- 2006 - ஈழப்போர் 2006: வாகரை, மாங்கேணியில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் பலி. [1]
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1896 - அல்பிரட் நோபல், சுவீடனைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். (பி. 1833)
- 1960 - சேர் சிற்றம்பலம் கார்டினர்
- 2001- அசோக்குமார், இந்திய நடிகர் (பி. 1911)
- 2006 - ஆகுஸ்டோ பினோச்செட், சிலி நாட்டு சர்வாதிகாரி (பி. 1915)
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புகள்